பண வரவு அதிகரிக்கவும் கடன் தீரவும் குபேர மந்திரம்

[ad_1] - Advertisement - அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமான அளவு பணவரவு இல்லாத பட்சத்தில் பலரும் தங்களுடைய வருமானத்தை மிஞ்சிய கடனை வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள். மேலும் திடீரென்று ஏற்படக்கூடிய மருத்துவ செலவினாலோ அல்லது பிள்ளைகளின் படிப்பு செலவினாலோ கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி இருப்பார்கள். அதிலிருந்து வெளியே வருவதற்கு பல விதங்களில் பல முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். அப்படி முயற்சிகளை மேற்கொண்டும் அவர்களால் கடனை அடைக்க முடியவில்லை என்றாலோ பணவரவை அதிகரிக்க முடியவில்லை என்றாலோ குபேர பகவானுக்குரிய இந்த மந்திரத்தை கூறினால் போதும். விரைவிலேயே கடன் பிரச்சினைகள் தீர்வதற்குரிய பணவரவு ஏற்படும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். பண வரவு அதிகரிக்கவும் கடன் தீரவும் குபேர மந்திரம் செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவர்கள் என்றால் அது மகாலட்சுமி தான். மகாலட்சுமி தன்னை வழிபடும் அனைவருக்கும் செல்வத்தை வாரி வழங்குவார். செல்வத்திற்கு பாதுகாவலாக திகழக்கூடியவர் குபேர பகவான். குபேர பகவான் நினைத்தால் மட்டும் தான் மகாலட்சுமியால் செல்வத்தை வாரி வழங்க முடியும். குபேர பகவான் யார் யாருக்கு எவ்வளவு பணத்தை தர வேண்டும், அவர்களுடைய கர்ம வினைகள் எப்படி இருக்கிறது என்பது அனைத்தையும் பார்த்து தான் தருவார் என்று கூறப்படுகிறது. மேலும் அனைத்து விதமான செல்வங்களையும் பாதுகாத்து கணக்கில் வைத்துக் கொள்பவராக குபேர பகவான் திகழ்கிறார். அதனால் குபேர பகவானின் அருளை பெறுபவர்களுக்கு செல்வநிலை உயரும் என்று கூறப்படுகிறது. - Advertisement - அப்படிப்பட்ட குபேர பகவானுக்குரிய கிழமையாக கருதப்படுவது வியாழக்கிழமை. அதுவும் குறிப்பாக மாலை ஆறு மணியில் இருந்து எட்டு மணிக்குள் குபேர பகவானை வழிபாடு செய்பவர்களுக்கு குபேர பகவானின் அருள் பரிபூரணமாக இருக்கும். குபேர பகவானுக்குரிய பூஜைகள் பல இருக்கின்றன. குபேர தீபம் இருக்கிறது. நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் குபேர பூஜை செய்வது அல்லது குபேர தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்வது குபேர பகவானின் அருளை பெற உதவும். குபேர பகவானுக்குரிய மந்திரத்தை நாம் கூறும்பொழுது நமக்கு பணவரவு என்பது அதிகரிக்கும். மேலும் இந்த பணவரவு அதிகரிப்பதால் நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது. இந்த மந்திரத்தை வியாழக்கிழமை அன்று குபேர நேரத்தில் அதாவது மாலை 6 மணியிலிருந்து 8 மணிக்குள் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு அல்லது நின்று கொண்டு சொல்ல வேண்டும். வீட்டு பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. பூஜை அறையில் அமர்ந்து தான் கூற வேண்டும் என்று எந்த நிபந்தனையும் கிடையாது. - Advertisement - இந்த ஆறு மணியிலிருந்து எட்டு மணிக்குள் எந்த இடத்தில் நாம் இருக்கிறோமோ அந்த இடத்தில் இருந்து கொண்டே வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டோ, நின்று கொண்டோ இந்த மந்திரத்தை 21 முறை உச்சிவிட்டால் போதும். பெண்கள் தீட்டு நேரத்தில் இந்த மந்திரத்தை உச்சரிக்க கூடாது. மற்ற நேரங்களில் உச்சரிக்கலாம். மந்திரம் ஓம் யக்ஷராஜாய வித்மஹே வைஸ்ரவ ணாய தீமஹி தந்தோ குபேர ப்ரசோதயாத் இதையும் படிக்கலாமே:விரும்பிய வேலை கிடைக்க விநாயகர் மந்திரம்இந்த எளிமையான மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6:00 மணியிலிருந்து 8:00 மணிக்குள் 21 முறை குபேர பகவானை நினைத்து கூறுபவர்களுக்கு நியாயமான முறையில் பணவரவு அதிகரிக்கும். அதன் மூலம் கடனில்லா நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம். - Advertisement - [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/slogam/%e0%ae%aa%e0%ae%a3-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f/

Comments

Popular posts from this blog

லலிதா நவரத்தின மாலை: Lalitha Navarathna Malai Lyrics

Garuda Dandakam Lyrics in Tamil

Avanithanile Piranthu Lyrics in Tamil